
கேரளாவைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் ரவுல் ஜான் அஜு, தனது ஏஐ தொழில்நுட்ப நிறுவனத்தில் தந்தையை ரூ.2 லட்சம் மாத ஊதியத்தில் பணியமர்த்தியுள்ளார்.
இதுவரை 15-க்கும் மேற்பட்ட ஏஐ தயாரிப்புகளை உருவாக்கியுள்ள ரவுல், தனது நிறுவனத்தில் 15 ஊழியர்களைக் கொண்டு இயக்கி வருகிறார்.
முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய தந்தையின் அனுபவத்தைப் பெறுவதற்காகவே அவரை நிறுவனத்தில் சேர்த்ததாக 16 வயதான ரவுல் தெரிவித்துள்ளார்.