சமூக வலைதளங்களில் தன்னைச் சுற்றி எழும் விமர்சனங்கள் குறித்து நடிகர் துருவ் விக்ரம் முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
உங்களை நேசிப்பவர்கள் மற்றும் விமர்சிப்பவர்கள் குறித்து கவலைப்படாமல், உண்மையோடு இருந்தால் அனைத்தும் கடந்து செல்லும் என்று அவர் கூறியுள்ளார்.
காதல் தோல்வி சர்ச்சை மற்றும் தனது படங்கள் குறித்த விமர்சனங்கள் தனக்கு மிகப்பெரிய பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.