
2021 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தான் வீரர்களின் ஈகோ அதிகரித்ததே அணியின் வீழ்ச்சிக்குக் காரணம் என முகமது யூசுப் சாடியுள்ளார்.
அந்த வரலாற்று வெற்றிக்குப் பிறகு விளையாடிய 221 சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் 115 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள நிலையில், இந்தியா 181 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
வீரர்கள் கர்வத்துடன் நடந்துகொண்டதும், பொறுப்பின்றி விளையாடியதும் அணியின் தொடர் தோல்விகளுக்கு வழிவகுத்ததாக முன்னாள் வீரர் முகமது யூசுப் வேதனை தெரிவித்துள்ளார்.