பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முதல்வர் குறித்து பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு, தவெக அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெண்களின் மாண்பையும் தாய்மையின் புனிதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய நயினார் நாகேந்திரன், தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
தாய் மீதும் தாய்மொழி மீதும் அக்கறை கொண்டவன் நான் என்று நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்திருந்தாலும், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை அவர் மீறியுள்ளதாக அமைச்சர் விமர்சித்துள்ளார்.