
சென்னை திருவொற்றியூரில் 2007 ஆம் ஆண்டு யாதவர் சங்கத் தலைவர் பாண்டியமணி கொலை வழக்கில் தொடர்புடைய ஷேக் அப்துல்லா என்பவர் 19 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜாமீனில் வெளியேறி தலைமறைவாக இருந்த அவரை கண்டுபிடிக்க, அவர் தற்போது எப்படி இருப்பார் என்பதை ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் படம் தயாரித்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
சூளைமேடு அருகே ஷேக் அப்துல்லா போன்ற தோற்றத்தில் இருந்த நபரைப் பிடித்து விசாரித்ததில் அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.