
செய்யாத தவறுக்குத் தண்டனை பெறும் சாதாரண மனிதனின் மானத்திற்கு என்ன விலை என்பதை இயக்குநர் சஞ்சீவ் பழூர் யதார்த்தமாகப் பதிவு செய்துள்ளார்.
ராமேஸ்வரம் கடலில் சில்லறை காசுகளைச் சேகரிக்கும் கருணாஸ், தற்செயலாகக் கிடைக்கும் விலை உயர்ந்த ஆபரணத்தை போலீஸில் ஒப்படைக்கும்போது தொடங்கும் சிக்கல்களே இப்படத்தின் கதையாகும்.
கருணாஸின் யதார்த்தமான நடிப்பும், வழக்கறிஞராக மிரட்டியுள்ள நிமிஷா சஜயனின் நடிப்பும், சாம் சி.எஸ் இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.