
நாட்டின் ஏழு முக்கிய நகரங்களில் கடந்த 2021 முதல் 2025 வரையிலான நான்கு ஆண்டுகளில் வீடுகளின் கட்டுமான செலவு 34 சதவீதம் உயர்ந்துள்ளது.
கட்டுமான செலவு அதிகரிப்பின் விளைவாக, அதே காலகட்டத்தில் வீடுகளின் விற்பனை விலை 59 சதவீதம் உயர்ந்துள்ளதாக அனராக் ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரியல் எஸ்டேட் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு, கடந்த நான்கு ஆண்டுகளில் கட்டுமானப் பொருட்களின் விலை மற்றும் தொழிலாளர் கூலி உயர்வால் ஏற்பட்டுள்ளது.