
எகிப்தின் தாஹாப்-நுவேபா நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து எதிர்பாராதவிதமாகத் தலைகீழாகக் கவிழ்ந்ததில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களில் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.