
சட்டப்பேரவையில் ஆதாரமில்லாமல் தன் மீது குற்றச்சாட்டு கூறிய நிதியமைச்சர் மரிய வில்சன் மீது விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தியுள்ளார்.
பள்ளிகள் முறையாக நடத்தப்படாத விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தியதாகவும், அந்த நபர் மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதாகக் கூறி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அன்பில் மகேஸ் ரூ.50 கோடி மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.