
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 1797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க உத்தரப் பிரதேச நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதை அன்புமணி ராமதாஸ் கண்டித்துள்ளார்.
குத்தகை முறையில் நியமிக்கப்படும் நடத்துநர்களுக்கு மாத ஊதியமாக ரூ.26,743 வழங்கப்படும் என்றும், ஒப்பந்த காலம் 11 மாதங்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த பணியிடங்களில் 45% குத்தகை பணியாளர்களாக மாறுவது சமூகநீதிக்கு எதிரானது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.