/polimer-news/media/media_files/2026/09/19/anbumaniramadoss-2026-09-19-07-27-16.jpg)
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பாமக ஆதரவு அளிக்காது என்று அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிர்வாகிகளுடன் ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாமக தங்களுக்கு ஆதரவளிக்கும் என்று அதிமுக தரப்பு எதிர்பார்த்திருந்த நிலையில், எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை என்ற பாமகவின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.