
சென்னையில் நடைபெற்ற தமிழ் ஹாக்கி லீக் (டிபிஎல்) ஆடவர் இறுதிப் போட்டியில் எஸ்டிஏடி விளையாட்டு விடுதி அணியும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியும் மோதின.
ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததை அடுத்து, பெனால்டி ஷூட்-அவுட் மற்றும் 'சடன் டெத்' முறை கடைபிடிக்கப்பட்டது.
'சடன் டெத்' முறையில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற எஸ்டிஏடி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.