
நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது, ராசுவா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் சோயல் காட்டுக்குள் ஓடி மரத்தில் ஏறி உயிர் தப்பியுள்ளான்.
பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய சிறுவன், பல மணி நேர தேடலுக்குப் பிறகு மீட்கப்பட்டு நுவாகோட் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
இந்த பேரழிவில் வடக்கு நேபாளத்தின் ராசுவா, நுவாகோட் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 17 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.