
கர்நாடக மாநிலம் ஹனூர் அருகே வனத்துறையினரால் அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் டேவிட் குமார் ஆகிய மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என பாமக உண்மை அறியும் குழு வலியுறுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.