
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு பணி நியமன ஆணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஜூலை 10-ம் தேதி முதல்வர் விஜய் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பணி நியமனம் கருணை அடிப்படையில் வழங்கப்படவில்லை, மாறாக குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்டது என்று மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர்.