
டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் இன்று மதியம் 1.30 மணியளவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கிய மூவர் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகளில் 8 தீயணைப்பு வாகனங்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் டெல்லி போலீஸார் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் இருந்த கட்டடத்தில் வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் ரேகா குப்தா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.