
சிங்கப்பூரின் 61-ஆவது தேசிய தின விழாவை முன்னிட்டு, தமிழ் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் 263 மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டை விட 47 மாணவர்கள் கூடுதலாகப் பயனடைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டில் 300 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சமூக சேவைக்காக முனைவர் எம்.ஏ. காதர் மற்றும் ஹாஜி எம்.ஏ. முஸ்தபா ஆகியோருக்கு 'சிறப்புமிகு குடிமகன் விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டது.