
வடக்கு சைப்ரஸில் இருந்து துருக்கிக்கு சென்ற கப்பல், கைரேனியா கடற்கரையிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கிய 270 பயணிகளில் இதுவரை 159 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 99 பேர் மற்றும் ஊழியர்களின் நிலை குறித்து தெரியவில்லை என மேயர் முராத் சென்குல் தெரிவித்தார்.
மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், கடலோர காவல் படை மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.