
தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கரின் பதவி ஒப்பந்தத்தை நீட்டிப்பது குறித்து அடுத்த 48 மணி நேரத்திற்குள் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அகர்கரின் பதவிக்காலம் 2026 செப்டம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் 2027 ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறவுள்ளது.
மூத்த வீரர் ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்த முரண்பட்ட தகவல்கள் இந்த மோதலுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படும் நிலையில், பிசிசிஐ அதிகாரிகள் அவருடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.