டெஸ்லா நிறுவனம் தனது புதிய தானியங்கி வாகனமான 'சைபர்கேப்' காரை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் ஸ்டீயரிங் மற்றும் பெடல்கள் கிடையாது.
முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த கார், ஓட்டுநர் இல்லாமலேயே பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.
இந்த புதிய தொழில்நுட்பம் எதிர்கால போக்குவரத்து முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.