
சென்னை திருநீர்மலை பகுதியில் விசிக மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் அன்பழகன் (40) என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட அன்பழகன் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 14 குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், தொழில் மற்றும் முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளது.
சங்கர்நகர் போலீஸார் நடத்திய விசாரணையில், அன்பழகனின் நண்பரான வீனஸ் என்பவருக்கும் அவருக்கும் இடையே இருந்த மோதலே இந்த கூலிப்படை கொலைக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது.