
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் அன்னை சின்னப்பிள்ளை குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனா தவறான தகவல்களைப் பதிவு செய்ததாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2001-ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் வாஜ்பாய் அன்னை சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து வணங்கியது வரலாற்று உண்மை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தவறான தகவல்களைப் பதிவு செய்த அமைச்சர் கீர்த்தனா சபையில் மன்னிப்பு கோர வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.