
சம்பா சாகுபடி பணிகளுக்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் விஜய் தண்ணீரை திறந்து வைத்து, காவிரியை வணங்கி பூக்களையும் நெல்மணிகளையும் தூவி நீரை வரவேற்றார்.
மேட்டூர் அணையில் இருந்து முதற்கட்டமாக விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதாகவும், இது படிப்படியாக 7000 கன அடியாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் சேலம் வந்த முதலமைச்சர் விஜய்க்கு மேச்சேரி முதல் மேட்டூர் அணை வரை பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர், மேலும் விவசாய சங்க பிரதிநிதிகள் அவருக்கு பச்சைத்துண்டு அணிவித்தனர்.