
மயிலாடுதுறை மாவட்டம் நல்லத்துக்குடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், திடீர் மழையால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்துள்ளன.
தார்ப்பாய் கொண்டு மூடியிருந்த போதிலும், தேங்கிய மழைநீரில் மூட்டைகள் ஊறியதை விவசாயிகள் வீடியோவாகப் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.
சேதமடைந்த நெல் மூட்டைகளை உடனடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.