
அமெரிக்காவில் நடக்கும் கிராண்ட் செஸ் டூர் பைனல்ஸ் அரையிறுதியின் 2-வது சுற்றில், இந்தியாவின் பிரக்ஞானந்தா ஜெர்மனியின் வின்சன்ட் கீமரை 55-வது நகர்த்தலில் வீழ்த்தினார்.
கிளாசிகல் சுற்றின் முடிவில் பிரக்ஞானந்தா 9-3 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் உள்ளார்.
இனி நடக்கவுள்ள 2 ரேபிட் மற்றும் 4 பிளிட்ஸ் பிரிவு போட்டிகளில் பிரக்ஞானந்தா மேலும் 6 புள்ளிகள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம்.