
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாஹிர் ஆண்ட்ராபி தெரிவித்துள்ளார்.
உலகின் முக்கிய கடல் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதே இந்த முயற்சிகளின் முக்கிய நோக்கமாகும்.
ஜூன் 22 அன்று வெளியிடப்பட்ட பாகிஸ்தான்-கத்தார் கூட்டறிக்கை மற்றும் இஸ்லாமாபாத் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது.