
கோவை அன்னூர் உப்புத்தோட்டம் பகுதியில் கொசு மருந்து அடித்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மோகன் (65), ராணி (75) ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
தூய்மை பணியாளர்கள் அளவுக்கு அதிகமாக மருந்து கலந்ததாகக் கூறி பொதுமக்கள் முற்றுகையிட்ட நிலையில், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
உயிரிழந்தவர்களுக்கு ஏற்கனவே உடல்நலப் பாதிப்புகள் இருந்ததாகவும், கொசு மருந்தால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும் பேரூராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.