
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி கடன் வட்டியை உயர்த்தியதை அடுத்து, இந்திய ரிசர்வ் வங்கியும் வரும் டிசம்பருக்குள் கடன் வட்டியை அரை சதவீதம் வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக நிதித்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் பெடரல் வங்கி கடன் வட்டி விகிதத்தை 3.75 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்த்தியுள்ள நிலையில், ஆர்.பி.ஐ அடுத்தடுத்த பணக்கொள்கை கூட்டங்களில் வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும்.
இதன் காரணமாக ரெப்போ விகிதம் தற்போதைய 5.25 சதவீதத்திலிருந்து 5.75 சதவீதமாக உயரக்கூடும் என்றும், இந்திய பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வம் குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.