
தமிழகத்தில் பத்திரப்பதிவு முடிந்த ஒரு வாரத்திற்குள் பட்டா பெயர் மாற்றத்தை முடிக்கும் வகையில் தானியங்கி முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்பு இருந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் தலையீடு குறைக்கப்பட்டு, சரிபார்ப்பு நிலைகள் நான்கிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சார்-பதிவாளர் ஒப்புதல் அளித்தவுடன் கோப்புகள் நேரடியாக தாலுகா அலுவலகத்திற்குச் செல்வதால், பெயர் மாற்றம் முடிந்ததும் விண்ணப்பதாரர்களுக்கு மொபைல் போன் மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது.