
நடப்பு கல்வியாண்டில் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கையிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்குமாறு சி.பி.எஸ்.இ.-க்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, மாணவர்களுக்கு மன அழுத்தம் தரும் வகையில் கூடுதல் சுமை அளிக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.
மும்மொழி கொள்கை தொடர்பான இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் செப்டம்பர் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.