
சென்னையில் நடைபெற்ற சக்தி விருது வழங்கும் விழாவில் பங்கேற்றுப் பேசிய நடிகர் சூரி, தான் பெரிதாகப் படிக்கவில்லை என்ற ஏக்கம் ஐஏஎஸ் அதிகாரிக்கு விருது வழங்கியதன் மூலம் தீர்ந்ததாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.
தனது தாயின் ஆதரவே தனது வெற்றிக்குக் காரணம் என்று குறிப்பிட்ட சூரி, ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராம் அவர்களுக்கு விருது வழங்கியதற்கு விழா அமைப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
பெண்கள் ஒரு குடும்பத்தின் வெற்றிக்கான சக்தியாக விளங்குவதாகவும், அவர்கள் உயரும்போது பல பெண்களின் கனவுகளும் சேர்ந்து உயர்கிறது என்றும் நடிகர் சூரி மேடையில் பேசினார்.