
அமெரிக்க ராணுவத்திடம் ஆயுதங்கள் குறைந்து வருவதாக ரகசியத் தகவல்கள் கசிந்ததைத் தொடர்ந்து, பென்டகனில் பணியாற்றும் 50 உயர் அதிகாரிகளுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட இந்த சோதனையில், பத்திரிகையாளர்களுக்குத் தகவல்களைக் கசியவிட்டது யார் என்பது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவிடம் வரம்பற்ற ஆயுதக் கையிருப்பு உள்ளதாகக் கூறிய அதிபர் டொனால்ட் டிரம்ப், இத்தகைய செய்திகளைப் பரப்புபவர்களைத் தேசத்துரோகிகள் என விமர்சித்துள்ளார்.