
நத்தத்தில் நடந்த டிஎன்பிஎல் லீக் போட்டியில், கோவை அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அணி வீழ்த்தியது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரித்திக் ஈஸ்வரன் அதிரடியாக விளையாடி 69 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
கோவை அணி நிர்ணயித்த 162 ரன்கள் இலக்கை நெல்லை அணி 19.5 ஓவர்களில் எட்டி, தனது 3-வது வெற்றியைப் பதிவு செய்தது.