
உடல்நலக்குறைவால் காலமான தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் உடல் அவரது விருப்பப்படி மதுரை தத்தனேரி மின்மயானத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசாரின் அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.
அவரது இறுதி ஊர்வலத்திற்கு முன்பு மதுரை வெப் மெமோரியல் சர்ச்சில் இறுதிச்சடங்கு பிரார்த்தனை நடைபெற்றதுடன், அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
சாலமன் பாப்பையா வசித்த தெருவிற்கு அவரது பெயரைச் சூட்டுவது குறித்தும், மதுரையில் மணிமண்டபம் கட்டுவது குறித்தும் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.