
துனிசியாவிலிருந்து இத்தாலி நோக்கி 15 அகதிகளுடன் சென்ற படகு மத்திய தரைக்கடலில் கவிழ்ந்ததில், 13 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விபத்துக்குள்ளான படகில் இருந்த 2 அகதிகளை அவ்வழியாகச் சென்ற மீன்பிடி படகினர் உயிருடன் மீட்ட நிலையில், மாயமான மற்றவர்களைத் தேடும் பணியில் துனிசியா கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய மேற்கொள்ளும் இத்தகைய சட்டவிரோத கடல் பயணங்களில் விபத்துகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.