
காவிரி பிரச்சினை குறித்து அனுபவம் இல்லாத தவெக அரசு, மற்ற கட்சிகளின் கருத்துகளை கேட்டிருக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைப் பெற இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது என்றே தெரியவில்லை என்றும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை கூட காப்பாற்ற முடியவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
காவிரி நீர் விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும், விவசாய பிரதிநிதிகளையும் அழைத்து கருத்துக்களை பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.