
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னையில் இன்று காலை நிலவரப்படி அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும் பதிவாக வாய்ப்புள்ளது.