
டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதிச் சுற்றில் இன்று திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
மழையால் லீக் மற்றும் தகுதிச் சுற்றுகள் பாதிக்கப்பட்ட நிலையில், புள்ளிப் பட்டியலில் முன்னிலை பெற்ற மதுரை பாந்தர்ஸ் ஏற்கனவே இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, வருகிற 28-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் மதுரை அணியை எதிர்கொள்ளும்.