ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2014-ம் ஆண்டு முதல் நடைபெற்ற அனைத்து அரசுப் பணி நியமனத் தேர்வுகளையும் ரத்து செய்வதாக முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.
தேர்வு முறைகேடுகள் குறித்து சிஐடி விசாரணைக்கும், முறைகேடு புகாருக்குள்ளான டிடிபிஎல் நிறுவனம் மூலம் நடந்த நியமனங்களை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசின் இந்த அறிவிப்பை ஏற்க மறுத்துள்ள மாணவர்கள், சிபிஐ விசாரணை கோரி 24 நாட்களாகத் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.