
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிறுவனமான பேபால், இந்தியாவில் உள்ள தனது மொத்த ஊழியர்களில் 10 சதவீதமான 600 பேரை எவ்வித முன்னறிவிப்புமின்றி பணிநீக்கம் செய்துள்ளது.
சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அலுவலகங்களில் பணியாற்றிய தொழில்நுட்பம் மற்றும் நிதிப் பிரிவு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இழப்பீடாக ஒரு மாத சம்பளம் மட்டுமே வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
உலகளவில் தனது மொத்த ஊழியர்களில் 20 சதவீதத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ள பேபால், அயர்லாந்தில் 164 மற்றும் இஸ்ரேலில் 70 ஊழியர்களை ஏற்கனவே பணிநீக்கம் செய்துள்ளது.