
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் முக்கிய வழக்குகளை விரைந்து நடத்த ப.சிதம்பரம், கபில் சிபல் உள்ளிட்ட 35 மூத்த வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அட்வகேட் ஜெனரல் பரிந்துரைத்த பட்டியலில் கே.கே.வேணுகோபால், அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி மற்றும் சி.எஸ்.வைத்தியநாதன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, மாநிலத்தின் நலன் சார்ந்த வழக்குகளில் தங்குதடையின்றி வாதாட இந்த வழக்கறிஞர்கள் குழுவை அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளது.