
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த டிஎன்பிஎல் எலிமினேட்டர் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் கோவை அணி தகுதிச் சுற்று-2க்கு முன்னேறியது.
திருப்பூர் அணி 3 ஓவர்களில் 15/0 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.
ஆகஸ்ட் 26-ம் தேதி நடக்கும் தகுதிச் சுற்று-2 போட்டியில் கோவை அணி திருச்சி அணியை எதிர்கொள்கிறது.