
ஜனநாயகன் திரைப்படத்தில் பாப்பாபட்டி கிராமத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் காட்சிகள் இருப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
மத்திய தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான வக்கீல், படத்தில் பாப்பம்பட்டி என்ற பெயர் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், மனுதாரர் கிராமத்தின் பெயர் இடம்பெறவில்லை என்றும் வாதிட்டார்.
சினிமாவில் கற்பனை தவிர்க்க முடியாதது என்று தெரிவித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் சக்திவேல், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.