
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை வாசிக்கும்போது தமிழைத் தவறாக உச்சரித்த நிதியமைச்சர் மரிய வில்சன், தனது பிழையைச் சுட்டிக்காட்டிய எம்.எல்.ஏ ராஜேந்திரனிடம் ஆணவத்துடன் நடந்துகொண்டதாக சீமான் விமர்சித்துள்ளார்.
அரசியல் முதிர்ச்சியின்றி அதிகாரத் திமிருடன் அமைச்சர் பேசியது கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.