
தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி காவிரி நீரைத் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடந்த கூட்டத்தில், நீர்வளத்துறை செயலர் சத்யபிரதா சாஹு காணொளி வாயிலாகப் பங்கேற்று இந்த முடிவை உறுதி செய்தார்.
கர்நாடகா ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நீர் திறக்காததால் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.