
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் தனது ஊழியர்களின் லேப்டாப்களில் டிஜிட்டல் பயனர் அனுபவ கண்காணிப்புக் கருவியை நிறுவியுள்ளது ஊழியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 600,000 பணியாளர்களைக் கொண்ட இந்நிறுவனத்தில், இந்த புதிய மென்பொருள் ஊழியர்கள் பயன்படுத்தும் செயலிகள் மற்றும் அதில் செலவிடும் நேரத்தைக் கண்காணித்துத் தகவல்களைச் சேகரிக்கிறது.
சைபர் பாதுகாப்பு நிறுவனமான Zscaler உடன் இணைந்து TCS Workspace Experience Studio-வை அறிமுகப்படுத்திய சில மாதங்களுக்குப் பிறகு இந்த கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.