
அமெரிக்காவில் குடியேற்ற விண்ணப்பங்களை தாக்கல் செய்பவர்கள் முறையான ஆவணங்களை சமர்ப்பிக்காவிட்டால், முன்னறிவிப்பின்றி நிராகரிக்க அதிகாரிகளுக்கு புதிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு விண்ணப்பங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதனை சரிசெய்ய விண்ணப்பதாரர்களுக்கு 12 வாரங்கள் வரை கால அவகாசம் வழங்கப்பட்டு வந்தது.
முழுமையற்ற விண்ணப்பங்கள் மூலம் வேலைவாய்ப்பு சலுகைகளை முறையற்ற வகையில் பெறுவதைத் தடுக்க அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு இந்த விதியை உடனடியாக அமல்படுத்தியுள்ளது.