
பிறப்புறுப்பைத் திருடும் கும்பல் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிய பொய்யான வதந்தியால், ஆப்பிரிக்க நாடுகளில் 80-க்கும் மேற்பட்டோர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
பிபிசி உண்மைச் சரிபார்ப்புக் குழுவின் ஆய்வில், இத்தகைய தாக்குதல்கள் கடந்த ஆண்டு மட்டும் 6 நாடுகளில் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடலில் ஏற்படும் மாற்றங்களை தவறாகப் புரிந்துகொண்டு நடத்தப்பட்ட இந்த வன்முறைக்கு எந்தவிதமான மருத்துவ அல்லது அறிவியல் ஆதாரமும் இல்லை என ஆய்வறிக்கை கூறுகிறது.