
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 9.50 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 2,246.50 ரூபாயாக இருந்த வணிக சிலிண்டர் விலை, பின்னர் குறைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச பதற்றங்களைக் காரணம் காட்டி விலை உயர்த்துவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.