
ஓமன் மீது குண்டு வீசுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விடுத்த மிரட்டலால், உலக சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 91.84 டாலர் வரை உயர்ந்துள்ளது.
2026-ம் ஆண்டில் இதுவரை உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 44%-க்கும் அதிகமாக உயர்ந்துள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3% அதிகரித்துள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்திற்கான 60 நாள் காலக்கெடு திங்கட்கிழமையுடன் முடிவடைந்த சூழலில், முதலீட்டாளர்கள் நிச்சயமற்ற தன்மையில் உள்ளனர்.